#BREAKING | கரூரில் மீண்டும் ரெய்டு! சக்தி மெஸ் கார்த்தி வீட்டின் சீல் உடைப்பு!  - Seithipunal
Seithipunal


கரூரில் மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் சக்தி மெஸ் கார்த்தி என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் என்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மே மாதம் 26 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் நண்பர்கள், திமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்தது. இது குறித்து எந்த அதிகாரப்பூர் அறிவிப்பை வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு, அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட சக்தி மெஸ் கார்த்தி என்பவரது வீட்டில், இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Sakthi mess karthi IT Raid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->