நாடகமாடி பெண்ணை அழைத்து காரில் ஏற்றி, சம்பவத்தை அரங்கேற்றிய கயவர்கள்.!! பரவி வரும் வீடியோ.!!
karnataka rape in car
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ ஒன்று பரவியுள்ளது. காரில் அரைகுறை ஆடையுடன் இருக்கும், ஒரு பெண்ணிடம் 5 வாலிபர்கள் தகாத முறையில் ஈடுபடுவதும், பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருப்பதுமாக அந்த வீடியோவில் இருந்தது. இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பாக பரவியது.
அந்த பெண் யார் அந்த வாலிபர்கள் யார் என்பதெல்லாம் குறித்து தெரியாமல் இருந்தது. இதன் பின்னர் அந்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றது. இதில், தானாகவே முன்வந்து கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஐந்து கல்லூரி மாணவர்கள் ஒரு மாணவியை கற்பழித்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு கல்லூரி மாணவரின் அழைப்பை ஏற்று மாணவி காரில் சென்றுள்ளார். அப்பொழுதுதான் அவர் சீரழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நம்பி வந்த அந்த மாணவியை ஏற்றிக்கொண்ட அந்த கார்,அதன் பின்னர் அவரது நண்பர்கள் நாலு பேரையும் ஏற்றிக்கொண்டது. அதன் பின்னரே அவர்கள் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த விசாரணையில் சுனில், குருநாதன்,பிஜ்வால், கிஷாந்த், பிரக்யா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்மேலும் அந்த வீடியோவை பரப்புவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.