காற்று வாங்கிய இளைஞர்களை அலறியடித்து ஓடவிட்ட ட்ரோன் கேமரா! தெறிக்கவிடும் வீடியோ!!
Kanyakumari district fully protect under police control
இந்திய நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் கடற்கரை பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் கண்டறிய ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் இருக்கிறதா என்பதனை கண்டறிய மாவட்ட போலீஸ் நிர்வாகம் டோன் கேமராக்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடற்கரை பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் கும்பலாக நின்று விளையாடுவதும் கூடி பேசுவதுமாக இருந்துள்ளனர்.
அப்போது ட்ரோன் கேமராக்கள் அப்பகுதிகளில் இயக்கி பார்த்தபொழுது கேமராக்களை பார்த்தவுடன் இளைஞர்களும், சிறுவர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர். இதை தொடர்ந்து கடலோர பகுதிகளில் இளைஞர்கள் கூடுவதும், மீனவர்கள் கடலுக்கு செல்வதையும் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Kanyakumari district fully protect under police control