முந்திச்செல்ல முயன்ற பைக்., எதிரே வந்த சொகுசு பேருந்து., பின்னால் வந்த லாரி..., அடுத்து அரங்கேறிய கொடூர விபத்து.! - Seithipunal
Seithipunal


பூதப்பாண்டி அருகே லாரியை முந்தி செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் மீது, எதிரே வந்த சுற்றுலா வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த அண்ணனும், தங்கையும் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், அவரின் சித்தப்பாவின் மகளை, அவர் பணி செய்யும் கணினி பயிற்சி மையத்திற்கு அழைத்து செல்ல, தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

பூதப்பாண்டி அருகே இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல மணிகண்டன் முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிரே வந்த சொகுசு பேருந்து மீது மோதிய மணிகண்டன் இருசக்கர வாகனம், நிலை தடுமாறி பின்னால் வந்த லாரியில் சிக்கி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் அடியில் சிக்கிய மணிகண்டனும், அவரது தங்கையும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari poothapandy bike accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->