தமிழகம் | பழம் பறித்த சிறுவர்களை கட்டி வைத்து காலில் சூடு வைத்த கொடூரம்!
Kanniyakumari House Owner Attacked Two minor Boys
கன்னியாகுமரியில் வீட்டிற்குள் நுழைந்து மாதுளை பழம் பறித்த சிறுவர்களை கட்டி வைத்து காலில் சூடு வைத்த வீட்டு உரிமையாளர் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என்று, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அடுத்த வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஷைஜி. சம்பவம் நடந்த அன்று ஷைஜியின் மகன்கள் இருவரும் அதேபகுதியை சேர்ந்த கலா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து மாதுளம் பழம் பறித்தாக சொல்லப்படுகிறது.
சத்தம் கேட்டு வந்த வீட்டின் உரிமையாளர் கலா, சிறுவர்கள் இருவரையும் பிடித்து, வீட்டிற்குள் கட்டி வைத்து காலில் சூடு வைத்தாக சொல்லப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரையும் மீட்ட அவரின் தாய் மருத்துவமனையில் அனுமத்துள்ளார். மேலும், சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் தாய் புகாரளித்துள்ளார்.
ஆனால், இந்த புகார் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், போலீசார் வேண்டுமென்றே இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Kanniyakumari House Owner Attacked Two minor Boys