ஏமாற்று பணத்தில் உடலையும், வீட்டையும் வளர்த்த காமுக பொறுக்கிக்கு பலே ஆப்பாக செதுக்கும் காவல்துறை.. நாகர்கோவில் நகராட்சி..!!
Kanniyakumari culprit cheats girl police plan gundas act
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் காசி. இவரது தந்தை இறைச்சி வியாபாரம் செய்து வரும் நிலையில், தந்தையின் வியாபாரத்தில் தனது உடலை வளர்த்து வந்த காமுகனின் எண்ணம் கேவலமாக இருந்துள்ளது.
முகநூலில் போலி கணக்கு துவங்கி, பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளான். சமூக வலைத்தளத்தில் தன்னை சமூக ஆர்வலராகவும், தொழில் அதிபராகும், ரோமியோகவும் அடையாளப்படுத்தி, கோட் சூட் புகைப்படத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளான்.
மேலும், இவனது புகைப்படத்தை பார்த்து மயங்கிய பெண்களிடம், பல கவிதைகளை பேசி மனதை கவர்ந்து ஏமாற்றிய நிலையில், சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் இவனிடம் ஏமார்ந்து பல லட்சக்கணக்கான பணத்தையும் பறிகொடுத்துள்ளார். இந்த பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு பின்னர், காசியின் சுயரூபம் பல வெளிவந்தது.
இந்த நிலையில், இவன் குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி வரும் நிலையில், சுமார் 80 பெண்களை தமிழகம் முழுவதும் காதலித்து ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. தான் ஏமாற்றும் பெண்களை மிரட்டி அதன் மூலமாக தனது இல்லத்தை நான்கு மாடி அளவில் கட்டியும் முடித்துள்ளான். பெண்களை மிரட்டியும், அவர்களின் குடும்பத்தாரிடம் பணம் பறித்து வந்த காமுகன் தனது செயல்களுக்கு ஒத்துழைக்க வைத்துள்ளான்.
இவனின் இல்லமும் விதிமுறையை மீறி கட்டப்பட்ட நிலையில், இதனை இடித்து தள்ளவும் நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல் துறையினர் தங்களின் சார்பாக பல வழக்குகளின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், குண்டர் சட்டம் பாய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதே நிதர்சனம்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanniyakumari culprit cheats girl police plan gundas act