காவல் அதிகாரி வில்சன் கொலை வழக்கில்... வெளியான பகீர் வாக்குமூலம்... தயாராகும் என்கவுண்டர்?..!!
kanniyakumar SI shootout murder case terrorist may be encounter by police
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வில்சன், இவர் பட்ந்தாலுமூடு அருகே உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு காரை சோதனை செய்ய அவர் தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் 3 ரவுண்ட் சுட்டுள்ளனர்.
இதில் உதவி ஆய்வாளர் வில்சன் தலை மார்பு மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து வில்சன் மயங்கி விழுந்தார். துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்ட பிற காவலர்கள் வருவதற்குள் காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயம் அடைந்த ஆய்வாளர் வில்சன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்கள் பயங்கரவாதிகள் என்ற தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பயங்கரவாத இயக்கத்தினை சார்ந்த ஆதரவாளர்களை கைது செய்த நிலையில்., இந்த கொலை சம்பவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்த நபரை பெங்களூரில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பயங்கரவாதிகள் ஆயுதத்தை கடத்த முயற்சித்த நேரத்தில் காவல் அதிகாரி வில்சன் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குடியரசு தினத்தன்று டெல்லி மற்றும் குஜராத் நகரில் தாக்குதல் நடத்த திட்டமும் தீட்டப்பட்டுள்ளது. இந்த விசயத்திற்கு சுமார் 17 பேர் அடங்கிய கும்பலுடன் பயங்கரவாதிகள் களமிறங்கியுள்ளதாகவும், மொத்த 17 பேரில் 5 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. காவல் அதிகாரி வில்சனை சுற்று கொலை செய்த அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் தற்போது கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவர்களை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து நீதிபதியின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கியூபிராஞ்ச் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தங்களின் இயக்கத்தை சார்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தால் இதனை போன்றே செய்வோம் என்று குற்றவாளிகள் பதில் அளித்துள்ளதாகவும், இதனால் காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
kanniyakumar SI shootout murder case terrorist may be encounter by police