ஒத்தையில் வந்திருப்பதாக நினைத்து பாய்ந்து அடித்த சில்வண்டுகள்.. அடங்க மறுத்தவர்களை தனி ஒருவனாக ஓடவிட்ட சிறப்பான சம்பவம்.!!
Kanchipuram Walajabad Fight Video Leaked Social Media Ambethkar Birthday Function Fight
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற சமயத்தில் ஏற்பட்ட மோதலில், கும்பலாக இருந்தவர்கள் ஒருவரை தாக்க அவர் பதிலுக்கு இரும்பு பைப்பை தூக்கி ஒட்டுமொத்த கும்பலையும் ஓடவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில், இளைஞர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன்போது டீசர்ட் அணிந்த இளைஞர் ஒருவரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தரப்பினர் தாக்கி உதைத்த நிலையில், ஒரு சமயத்தில் அவரின் சட்டை கிழிந்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், அங்கு இருந்த இரும்பு பைப்பை தூக்கி தன்னை தாக்கிய அனைவரையும் அடித்து நொறுக்கி ஓட விட்டார்.
அங்கிருந்த சில்வண்டுகள் கும்பலாக சேர்ந்து அவரை தாக்கிய நிலையில், பதில் தாக்குதலை தடுக்க இயலாமல் சிதறி ஓடியது. அருகே காவல் அதிகாரி ஒருவர் இருந்ததற்கான அத்தாட்சியாக காவல் அதிகாரியின் வாக்கி டாக்கியில் இருந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இரு தரப்பையும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் என யாரும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கவில்லை. இந்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தெரியவருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanchipuram Walajabad Fight Video Leaked Social Media Ambethkar Birthday Function Fight