போதைக்கு மாற்றாக வார்னிஷ்... ஸ்ரீபெரும்புதூரில் பெரும் சோகம்.!!
Kanchipuram man died when he drinks varnish thinks of liquor alcohol
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சார்ந்தவர் சாமிநாதன். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த சாமிநாதன் அவ்வப்போது மது அருந்தி வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக மது அருந்த இயலாமல் தவித்து வந்துள்ளார். இந்த சமயத்தில், போதைக்காக வார்னிஷ் குடிக்கலாம் என்ற விபரீத எண்ணம் தோன்றியுள்ளது.
இதனையடுத்து சாமிநாதன் போதைக்காக வார்னிஷை குடித்து உயிருக்கு போராடவே, இவரை மீட்ட குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். மருத்துவமனையில் இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram man died when he drinks varnish thinks of liquor alcohol