மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை - கமல்ஹாசன் விளக்கம்.!
kamal explain not participate in parliment election
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ. பிரகாஷுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையை தொடங்கினார்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:- ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம்.
ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்த போது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம்.நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாடாததற்கு காரணம் தியாகம் என்று கூறுகிறார்கள் . ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம்" என்று தெரிவித்தார்.
English Summary
kamal explain not participate in parliment election