அண்ணே அது இரண்டு புள்ளைக்கு தாயாண்ணே... காதல் வலையில் நெஞ்சில் இறங்கிய இடி..!!
Kallakurichi Woman Anitha Devi Cheating youngster Love Drama Police Investigation 8 May 2021
இரண்டு குழந்தைகளின் தாய் தனது முதல் திருமணத்தை மறைத்து மற்றொரு இளைஞரை திருமணம் செய்து கொள்ள முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உலகங்காத்தம்மன் கிராமத்தைச் சார்ந்த தம்பதி அனிதா தேவி - முனியசாமிப்பிள்ளை. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து, அதன் அடையாளமாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அனிதா தேவி அங்குள்ள சிறுவல் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவரை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் சுபாஷ் சந்திரபோஸ் மீது அங்குள்ள கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் அனிதா தேவியை திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் கூறிய நிலையில், பெற்றோர் அனிதாவின் வீட்டிற்கு சென்று விசாரிக்கையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகளும் கணவரும் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக அனிதாவிடம் விசாரணை செய்ய முயற்சிக்கையில், அங்கிருந்த அனிதாவின் கணவர் மற்றும் உறவினர்கள், சுபாஷ் சந்திர போஷின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, சுபாஷ் சந்திர போஸ் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, தலைமறைவாக உள்ள அனிதாவை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kallakurichi Woman Anitha Devi Cheating youngster Love Drama Police Investigation 8 May 2021