விபத்தில் பலியான அவசர ஊர்தி ஓட்டுநர் மணிகண்டன் குறித்து நெகிழ்ச்சி தகவல்.. கண்ணீர் சோகம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் அண்ணா நகர் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 108 அவசர ஊர்தி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

சம்பவத்தன்று, மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வேலைக்கு சென்று கொண்டு இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள புதூர் ஏறி பகுதியில் வருகையில், முன்னால் நின்றுகொண்டு இருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மணிகண்டனின் வாகனம் மோதியுள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மணிகண்டன் பணியாற்றி வந்த காலத்தில், அவசர ஊர்தியில் சென்ற நோயாளிகள் யாரும் இறக்கவில்லை என்றும், விபத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் சோக தகவல் தெரியவந்துள்ளது. 

மணிகண்டனிற்கு திருமணம் முடிந்து சுகந்தி என்ற மனைவிக்கும், 4 வயதுடைய கோபிநாத் என்ற மகனும், ரகுநாதன் என்ற 2 வயது மகனும் உள்ளார்கள். மேலும், சுகந்தி தற்போது நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Ambulance Driver Manikandan Death an Accident Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->