விசாரணை கைதி மரணம்!! காவல் நிலையத்தில் நீதிபதி திடீர் ஆய்வு!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் ரதி தம்பதியர் தங்களது ஒன்றை வயது மகன் ஸ்ரீ ஹரிஷ் உடன் கடந்த அக்டோபர் 5ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சென்ற போது அவருடன் அறிமுகமான பெண் ஒருவர் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி குழந்தையை கடத்திச் சென்றார். இது தொடர்பாக முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடி வந்தனர். 

இந்நிலையில் கோவை மாவட்டம் ஆலந்துறை போலீசார் குழந்தையை கடத்திய திலகவதி என்ற பெண்ணை நேற்று கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது திலகவதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

அவர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று கோவை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சந்தோஷ் ஆலந்துறை காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

குழந்தை கடத்தலில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி திலகவதி இறந்தது குறித்து காவல் நிலைய அதிகாரிகளிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். மருத்துவர்களின் பிரேத பரிசோதனையில் சைனைடு போன்ற மருந்து குடித்து அவர் இறந்திருப்பார் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பகுப்பாய்வு முடிவுகள் வந்த பிறகு முழுமையான விவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge investigate at the police station regarding death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->