முத்தூட் பைனான்ஸ் நகைகளை ஆட்டைய போட்ட ஆடிட்டர் ..சென்னையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை தியாகராய நகர் முத்தூட் பைனான்ஸில் நகைகள் திருடப்பட்டு உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் தியாகராய நகர் கிளையில் வருடாந்திர கணக்கு சரிபார்த்த போது ஆடிட்டர் ரூபன் செல்வகுமார் 9 சவரன் நகை திருடி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முத்தூட் பைனான்ஸ் தியாகராய நகர் கிளைக்கு வந்த போலீசார் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆடிட்டர் ரூபன் செல்வகுமார் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆடிட்டர் ரூபன் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jewelery theft at Muthoot Finance by auditor


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->