வேகமாக வந்த ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து.! வாலிபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த ஜிப் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(38). இவர் குரங்கணி பிச்சாங்கரையில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணேசன் நேற்று மோட்டார் சைக்கிள் போடி-முந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்து ஜீப் ஒன்று எதிர்பாராத விதமாக கணேசன் மீது திடீரென மோதியது. இதில் கணேசன் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் ஜிப்பில் வந்த 2 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த குரங்கணி போலீசார் உயிரிழந்த கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeep motorcycle accident in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->