சிறை அதிகாரி வீட்டை கொளுத்திய மர்ம நபர்கள்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


சிறை அதிகாரி வீட்டை மர்ம நபர்கள் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்ற நிலையில், அவரது மனைவி பவ்யா, இரண்டு மகன்கள் மற்றும் தாய் தந்தை என 5 பேர் வீட்டில் இருந்து வந்துள்ளனர். இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்து எரிந்த வாடை வீசியதால் வெளியே வந்து பார்த்த போது சமையலறையில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் யாரோ தீ வைத்தால் சமையலறையில் எரிந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர்களையும் அப்புறப்படுத்தினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் தீயை அணைத்தனர். காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த சிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் சிறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில் 2 பாட்டிலில் சிறிது அளவு பெட்ரோல் இருந்தது தெரியவந்தது. சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி ஜெயிலர் மணிகண்டன் தலைமையில் சிறை அதிகாரிகள் ஆய்வு செய்து முக்கிய குற்றவாளிகளிடம் இருந்து செல்போன் முதலியவற்றை பறிமுதல் செய்தனர். இதனால், அவர்கள் யாரேனும் தங்கள் ஆட்கள் மூலம் அவரது குடும்பத்தை கொல்லை முயற்சி செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jail officer home attacked


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->