சாலை மறியல்.. அதிரடி கைது... சென்னையை தொற்றிக் கொண்ட பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு ஊழியர்களான சங்கங்களான ஜாக்டோ மற்றும் ஜியோ அமைப்பினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இதனை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை அலுவலகமான அன்பழகன் வளாகம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்தனர். அதனை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். 

கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் சமுதாய நலக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jacto geo road block protest in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->