சென்னையில் ஓய்ந்தது.. "நாமக்கல்லில் தொடருது"..5வது நாளை எட்டிய ஐடி ரெய்டு.!!
IT raid reaches 5th day in namakkal
சென்னையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற வந்த வருமான வரி துறை சோதனையானது நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு தொடர்பாக முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது சென்னையில் அமைந்தகரை, கீழ்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வந்தது.
கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய உரிமையாளர்களின் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் நாற்று இரவோடு இந்த சோதனை நிறைவு பெற்ற அதை வேளையில் நாமக்கல்லில் உள்ள அரசு ஒப்பந்ததாரரான சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் 5வது நாளாக வருமானவரித்துறை சோதனையான நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
IT raid reaches 5th day in namakkal