“எடப்பாடி – விஜய் கூட்டணிக்கான மறைமுக பாலம் ஆதவ் அர்ஜுனா?” – சுக்குநூறாக உடையுதா திமுக ஓட்டு? ஆதவ் அர்ஜுனா செம லாபி? - Seithipunal
Seithipunal


அரசியல் அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் தகவலை மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் வெளியிட்டுள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்பவர் ஆதவ் அர்ஜுனா தான்” என்று கூறியிருக்கிறார்.

செப்டம்பர் 27க்குப் பிறகு, விஜயின் அரசியல் பலம் கணிசமாக அதிகரித்துவிட்டது என பாண்டியன் கூறுகிறார். அதிமுகவின் பொதுக்கூட்டங்களில், தவெகக் கொடியும் அதிமுகக் கொடியுடன் இணைந்து பறக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம், கிறிஸ்துவர், படித்த தலித்துகள் ஆகியோரின் வாக்குகள் பெருமளவில் திமுகவுக்கு சென்றுள்ள நிலையில், அதிமுகக்கு சுமார் 10 சதவீத வாக்குகள் தேவைப்படுவதாக அவர் பகுப்பாய்வு செய்துள்ளார். இதை உடைக்க வேண்டி, எடப்பாடி பழனிசாமி கடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று அவர் கூறுகிறார்.

அதே சமயம், பாஜகவிடம் விஜய் சரண்டர் ஆன பின்னர், பாஜக விஜயை தமிழக அரசியலுக்குள் தள்ளியதாக பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக தொண்டர்கள் “விஜயுடன் இணைவதே நமது எதிர்காலம்” என்ற நம்பிக்கையில் உறுதியடைந்துவிட்டார்கள்.

இப்போது, அறிவிக்கப்படாத கூட்டணியாக தவெக அதிமுகவுடன் இணைந்துவிட்டது போல அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. திமுகவுக்கு எதிராகச் செயல்படுவதுதான் விஜயின் முக்கிய நோக்கமாக மாறியிருக்கிறது என்றும், இதையே பாஜகவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் பாண்டியன் கூறினார்.

அதிமுக, திமுகவை எதிர்க்கும் போது, எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. “விஜயின் சொந்த எம்எல்ஏக்களாக இருந்தாலும் கூட இப்படி பேச மாட்டார்கள்” என்று அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

கரூரில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திப்பாரா அல்லது பனையூரில் வரவழைப்பாரா என்ற விவாதம் தற்போது விஜய் தரப்பில் நடந்து கொண்டிருக்கிறது.

அதோடு, புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியே வந்ததற்குக் காரணமாக ஆதவ் அர்ஜுனாவையே பாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லியில் தன்னுடைய மாமனாரின் அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி பல சலுகைகளை அவர் பெற்றுத்தந்ததாகவும் கூறியுள்ளார்.

இப்போது விஜயின் அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனாதான். எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய்க்கும் இடையே நடுவண் பாலமாக இருந்து, இருவரையும் ஒரே பாதையில் இழுத்துச் செல்கிறார். அதேபோல் டெல்லியில் அமித்ஷாவுடனும் தொடர்பில் உள்ளார் என்று பாண்டியன் வலியுறுத்துகிறார்.

16 நாள் நிகழ்வுகளிலிருந்து மீண்டு வந்த விஜய், அதிமுக – பாஜக கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கத்தக்க வியூகங்களை வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதாவது, அடுத்தடுத்த மாதங்களில் தமிழக அரசியலில் பெரிய கூட்டணிப் பரிமாற்றங்கள் நிகழ வாய்ப்பு அதிகம் என்கிறார் தமிழா தமிழா பாண்டியன்!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Adhav Arjuna the indirect bridge for the Edappadi Vijay alliance Will the DMK vote turn into a landslide Is Adhav Arjuna a lobbyist


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->