9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 58 வயது கொடூரன்.! அரங்கேறிய சோகம்.!!
in vilupuram girl sexual harassment by aged man police arrest culprit
உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகளானது அதிகரித்து கொண்டு வருகிறது. தினமும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
இவ்வாறாக பல விதமான கொடூரங்களை தாங்கி வரும் பெண்களில்., சிறு குழந்தைகளை கூட காம கொடூரன்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் துயரமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அரங்கேறியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருக்கோவிலூர் தாலுகாவில் அமைந்துள்ள எடப்பாளையம் கிராமத்தை சார்ந்த 9 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இவர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., இதே ஊரில் அப்துல் கபூர் என்பவரின் மகன் அப்துல் ரசாக் (வயது 58) என்பவன் வசித்து வந்துள்ளான். கொடூரன் அப்துல் ரசாக் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இது குறித்து பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vilupuram girl sexual harassment by aged man police arrest culprit