கணவன் இறந்த துக்கம் நெஞ்சை அடைக்க... ஆறு வயது மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேமுர் கிராமத்தை சார்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவரது மனைவியின் பெயர் சரசு (வயது 32). இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகி திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இருவருக்கும் ஆறு வயதுடைய வைசாலி என்ற மகள் இருக்கிறார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக சரசு பணியாற்றி வரும் நிலையில்., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக கார்த்திக்கின் உடல்நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சரசு., தனது கணவரை கவனித்து வந்துள்ளார். 

இந்த சமயத்தில்., கார்த்திக்கிற்கு நோய் மிகவும் அதிகமானதால் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் கடுமையன மன விரக்தியில் இருந்து வந்த சரசு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

died, suicide attempt, killed, murder

மேலும்., கணவரை இழந்து தவித்து வந்த சரசு தனது மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செயது., இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றுக்கு தனது மகளை அழைத்து சென்று தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். 

இவர்கள் இருவரும் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த நிலையில்., கிணற்றில் தாயும் - மகளும் பிணமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவரவே., ஊர் மக்கள் அனைவரும் பதறியபடி சம்பவ இடத்தில் திரண்டனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் இருவரின் உடலை கைப்பற்றி., பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In villupuram mother attempt suicide with her daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->