விவசாய நிலத்திற்கு சென்ற பெண் மாயமான வழக்கில் பகீர் திருப்பம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் அருகேயுள்ள பெரியபாபு சமுத்திரம் பகுதியை சார்ந்தவர் மோகன். இவர் விவசாயியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் தில்லைநாயகி (வயது 45). மோகனிற்கு அங்குள்ள பம்பையாற்று பகுதியில் கரும்பு தோட்டம் உள்ள நிலையில்., தில்லைநாயகி தண்ணீர் பாய்ச்ச நேற்று முன்தினம் மதியம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். 

இவர் இரவில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அவர் இல்லை. இவரை பல இடங்களில் தேடியும் காணாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த சமயத்தில் அஃனுள்ள சோளத்தட்டை புதரில் சாக்கு முட்டையானது இருந்துள்ளது. இதனை கண்டு சந்தேகமடைந்த காவல் துறையினர் சாக்குமூட்டையை பிரித்து பார்த்து சோதனை செய்த சமயத்தில்., தில்லை நாயகி பிணமாக இருந்துள்ளார். மேலும்., அவரது கம்மல் மற்றும் மூக்குத்தியானது கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை அடுத்து., இவரை நகைக்காக கொலை செய்து இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்தனர். 

மேலும்., இது தொடர்பான விசாரணையில் மோகன்தாஸிற்கும் - பக்கத்து நிலத்தின் உரிமையாளர் அருள்ராஜ் (வயது 35) என்பவருக்கும் முன்விரோதமானது இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருள்ராஜை கைது செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில்., பின்னர் விசாரணையில் உண்மையை கூறியுள்ளார். 

crime,

பெரியபாபு சமுத்திரத்தை சொந்த ஊராக கொண்ட எனக்கு கரும்பு தோட்டமானது உள்ளது. எனக்கு இன்னும் திருமணம் முடியாத நிலையில்., எனது தாயார் மகாலட்சுமி புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள மடுகரையில் வசித்து வந்த நிலையில்., அவருடன் நானும் தங்கியிருந்தேன். மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நிலையில்., பணியில் இருந்து நான் நீக்கம் செய்யப்பட்டேன். 

சில மாதங்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்த சமயத்தில்., கரும்பு தோட்டத்தில் வந்து பார்த்த சமயத்தில் எங்களுக்கும் - மோகனிற்கும் தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்., சம்பவத்தன்று மோகனின் மனைவி தில்லைநாயகி தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார். 

இந்த சமயத்தில்., எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்., தில்லைநாயகி அவதூறாக பேசியதை அடுத்து., அவரை கொலை செய்ய முடிவு செய்து அவரை மண்வெட்டியால் தாக்கினேன். இதனைத்தொடர்ந்து அவரின் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி அவரின் உடலை சாக்கு மூட்டையில் வைத்து தப்பி சென்றேன். இப்போது நான் காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in villupuram girl killed police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->