5 பெண்களுடன் உல்லாசம்..! கீழே வீழ்ந்து கால்களை உடைத்துக்கொண்ட ரவுடி.! காவல் துறையினர் மாவுக்கட்டு போட்ட தரமான சம்பவம்..!!
in vellore rowdy arrest by police when enjoy with 5 girls
வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியை சார்ந்தவன் வீச்சு ரமேஷ். இவன் அங்குள்ள பகுதிகளில் தன்னை ரவுடி என்று அறிமுகம் செய்து கொண்டு., ரவுடிக்கான செயல்., கொலை மற்றும் கொள்ளை., ஆட்கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளான்.
இதன் காரணமாகவே அங்குள்ள காவல் நிலையத்தில் இவன் பெயரில் பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்., கடந்த 2016 ஆம் வருடத்தின் போது உயிர் நண்பனையே பாலாற்றில் உயிரோடு புதைத்து கொலை செய்திருந்தான்.
இந்த வழக்கில் காவல் துரையினரால் கைது செய்யப்பட்ட ரமேஷ்., ஜாமினில் வெளியான நிலையில்., ஜாமினில் வெளிவந்தும் ஓட ஓட ஒருவரை வெட்டி கொலை செய்தான். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்த ரமேஷை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில்., இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில்., ரமேஷ் மட்டும் தலைமறைவாக வாழ்ந்ததால்., காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தான்.
இந்த தருணத்தில்., அங்குள்ள வாலாஜாபேட்டையை அடுத்துள்ள கீழ்புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் வீட்டில் ரமேஷ் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் ரமேஷை கைது செய்யும் நோக்கில்., ரகசிய தகவல் வந்த இடத்திற்கு சென்றனர்.
அங்கு ரமேஷ் இருக்கும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த காவல் துறையினருக்கு அதிர்ச்சியாக 5 பெண்களுடன் உல்லாசமாக ரமேஷ் இருந்துள்ளான். காவல் துறையினரை கண்டதும் தப்பியோட முயன்ற ரமேஷ்., இருட்டில் கண் சரியாக தெரியதால் கீழே விழுந்து கால்களை உடைத்துக்கொண்டார்.
இதனையடுத்து ரமேஷை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வைத்தனர். இந்த விஷயத்தில் வீட்டின் உரிமையாளர் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore rowdy arrest by police when enjoy with 5 girls