ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்..! திருச்சியில் அரங்கேறிய பெரும் சோகம்..!!
in trichy teacher try to rap 16 years old boy police investigation going on
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகேயுள்ள வனப்பகுதியில்., மலைவாழ் மக்கள் குழந்தைகளின் படிப்பிற்க்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரசு தொடக்கப்பள்ளியானது செயல்பட்டு வருகின்றது.
இந்த பள்ளியில் ஆசிரியராக சுமார் 26 வயதுடைய ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் இருக்கும் இடத்திற்கும்., பள்ளி இருக்கும் மலைக்கிராமத்திற்கும் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததன் காரணமாக., அங்குள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதியில் 2 கிமீ நடைபயணம் செய்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில்., இந்த வழியிலேயே தினமும் ஆசிரியை வந்து செல்வது வழக்கம். இதனைப்போன்று கடந்த 9 ஆம் தேதியன்று பள்ளி நிறைவு பெற்றதும்., மாலை 4 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக வனப்பகுதி வழியாக நடந்து வந்து கொண்டு இருந்துள்ளார்.
இதனை கவனித்து கொண்டு இருந்த அதே கிராமத்தை சார்ந்த 16 வயதுடைய சிறுவன்., ஆசிரியையை வழிமறித்து பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு., ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இவனது பிடியில் இருந்து தப்பித்த ஆசிரியை மீண்டும் மலைக்கிராமத்திற்கு வந்துள்ளார்.
அங்கு இருந்த கிராம மக்களிடம் விஷயத்தை கூறி கதறியழுத நிலையில்., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் துறையினருக்கும் - மாவட்ட பழங்குடி நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் மறுநாள் காலையில் மலைக்கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில்., காவல் துறையினர் ஆசிரியை மற்றும் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சமரசம் செய்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை அறிந்த மலைக்கிராம மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் துறையூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து., ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற கொடூரனை கைது செய்ய வேண்டும் என்றும்., அப்பகுதியில் இருக்கும் பெண்கள் மற்றும் பள்ளியில் பயின்று வரும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy teacher try to rap 16 years old boy police investigation going on