36 மணிநேரம் கடந்தும் நடக்கும் மீட்புப்பணி..! சோகத்தில் மக்கள்..!!
in trichy manaparai child rescue by officers
மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவரது 2 வயது மகன் சுஜித் வின்சென் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், சுஜித்தை மீட்கும் முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் பாறை இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதெற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உருவாக்கிய பிரத்யேக இயந்திரத்தின் மூலமாக குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு இயந்திரத்தின் வழியாக விடப்பட்ட கயிற்றைக் கொண்டு கைகளில் சுருக்கு போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது.
இதையடுத்து மதுரை, திருச்சி மற்றும் கோவையிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூன்று மாவட்ட தீயணைப்பு துறையினரும் தாங்கள் கொண்டு வந்த சாதனங்களை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.அதிகாலை 2.30 மணிக்கு சென்னை ஐஐடியைச் சேர்ந்த குழுவினர் வந்து பிரத்யேக சாதனங்களை கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும்., தற்போது சிறுவனின் குரலானது அதிகாலை 5 மணிக்கு மேலாக கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. சிறுவன் தற்போது 70 அடி ஆழத்தில் உள்ள நிலையில்., 12 மணிக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 12.45 மணியளவில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து மீட்பு பணிகளை துவங்கினர்.
இவர்களுக்கு உதவியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் அதிகாரிகள் விரைந்து மீட்பு குழுவினருக்கு உதவி செய்ய விரைந்து., குழந்தை சிக்கியுள்ள பகுதியில் இருக்கும் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு மற்றும்., பிற தொழில்நுட்ப உதவிகளையும் செய்ய விரைந்தனர். நெய்வேலி சுரங்க குழு சார்பாக தற்போது குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு அருகேயே., மற்றொரு ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் போன்ற பல அரசு அதிகாரிகள் அருகில் இருந்து குழந்தை மீட்புப் பணிகளைக் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy manaparai child rescue by officers