இரயில் பயணத்தில் படிக்கட்டு பயணம்.. தலை துண்டாகி உயிரிழந்த பரிதாபம்.. இரயில் பயணிகள் உஷார்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் இரயில் நிலையத்தின் நடைமேடை தண்டவாளத்தில் ஆணின் சடலமொன்று தலை துண்டான நிலையில் நேற்று காலை இருந்துள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த இரயில்வே காவல் துறையினர், இளைஞருடன் உடலை மீது அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்த நபரின் சட்டையில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இரயில் பயணசீட்டு போன்றவை இருந்துள்ளது. இதனையடுத்து இறந்து கிடந்த நபர் அங்குள்ள சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்புராயபுரம் முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சுதாகர் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், இவரது வயது 36 என்பதும், இவரது தந்தை தங்கராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இயற்கையை எய்தியதும் தெரியவந்துள்ளது. தாயாரின் சொந்த ஊரில் வசித்து வந்த சுதாகர், கோயம்புத்தூரியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். சுதாகருடைய 2 அண்ணன் மற்றும் 2 அக்கா திருமணம் செய்துள்ள நிலையில், சுதாகருக்கு திருமணம் முடியவில்லை. 

ஊரில் இருக்கும் தனது தாயாரை பார்க்க கோயம்புத்தூரில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்ற சுதாகர், மதுரையில் திருநெல்வேலி வழியாக செல்லும் அதிவிரைவு இரயிலில் ஏறியுள்ளார். இரயிலில் அதிகளவு கூட்டம் இருந்த காரணத்தால் படியில் அமர்ந்த நிலையில், இரயில் கடம்பூர் இரயில் நிலையத்திற்குள் நுழைந்த நேரத்தில் தண்டவாள இணைப்பு பகுதியின் காரணமாக பெட்டிகள் குலுங்கியுள்ளது. 

இதனால் நிலைதடுமாறி சுதாகர் இரயிலில் இருந்து கீழே விழுந்ததில், இரயில் சக்கரத்திற்கு இடையே மாஷண்டை சுதாகரின் தலையில் சக்கரங்கள் ஏறி இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi kadampur train step travel man died unfortunately


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->