அவசர ஊர்தியிலே பிரசவம்.. ஆதிலட்சுமியின் அதிஷ்டம்.. நெகிழ்ந்துபோன குமார்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியை சார்ந்தவர் கதிரவன். இவரது மனைவியின் பெயர் ஆதிலட்சுமி. கதிரவன் லாரி ஓட்டுநராக பணியற்றி வரும் நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

ஆதிலட்சுமி மூன்றாவது முறை மீண்டும் கர்ப்பமாக உள்ளதால்., இவரை கணவர் கதிரவன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்து கவனித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., தற்போது நிறைமாத கர்ப்பிணியாக ஆதிலட்சுமி இருந்து வந்தார். 

இவருக்கு எந்த சமயத்திலும் பிரசவத்திற்கான வலி ஏற்படலாம் என்று உறவினர்கள் எண்ணியிருந்த நிலையில்., நேற்று மாலை நேரத்தில் திடீரென பிரசவ வலியானது ஏற்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து இவரது உறவினர்கள் கீழ்பென்னாத்தூர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்த சமயத்தில்., மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. 

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்., அவசர ஊர்தியில் சென்று கொண்டு இருக்கும் போதே பிரசவ வலியானது திடீரென ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவசர ஊர்தியில் இருந்த மருத்துவ பணியாளர் குமார் என்பவர் பிரசவம் பார்த்ததில்., ஆதிலட்சுமிக்கு அழகான பெண் குழந்தையானது பிறந்துள்ளது. இதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சென்றவுடன் மருத்துவர்கள் தாயையும் - சேயையும் நலமாக பார்த்து கொண்டனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai woman delivery cute girl baby in ambulance


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->