திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ள மாவட்ட ஆட்சியர்..!! இந்தியாவிற்கு தெரியப்படுத்த வேண்டுகோள்..!!
in thiruvannamalai collector request to district peoples
இந்தியாவின் மத்திய அரசின் திட்டமான "தூய்மை கிராமம் கணக்கெடுப்பு" பெற்றுக்கொண்டு., தற்போதைய வருடத்திற்கான தூய்மை கிராம கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இது குறித்த விழிப்புணர்வை அந்தந்த மாவட்ட மற்றும் மாநில மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில்., அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்., திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மாவட்ட மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்து செய்தியொன்றை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்., திருவண்ணாமலை மாவட்ட கிராமங்களின் தூய்மை குறித்து., மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் தூய்மை கிராமம் கணக்கெடுக்கும் பணியின் பங்கெடுப்பால்., முதன்மை மாவட்டமாக திருவண்ணாமலை வருவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு தொடுதிரை அலைபேசி வைத்திருக்கும் நபர்கள்., கீழ்கண்ட வழிமுறைகளை செய்ய வேண்டும் என்றும்., தொடுதிரை அலைபேசி இல்லாத நபர்கள் அதற்கான வழிமுறைகள் குறிப்பிட்டுள்ளது போல செய்ய வேண்டும்.
இதனை செய்யும் பட்சத்தில்., திருவண்ணாமலை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றுவதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த அறிய வாய்ப்பினை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் உபயோகம் செய்து., பயன்படுத்தி கொள்ளுங்கள்..
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvannamalai collector request to district peoples