7 வயது சிறுமியை சீரழித்த காம கொடூரனுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..! திருப்பூர் நீதிபதிகள் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளை அறியும் நாம் அதற்கான வெளிப்பாடுகளாக கோபத்தை வெளிப்படுத்தி வந்தாலும்., நமது நாட்டின் சட்டதிட்டங்கள் கடுமையாக இருக்கும் பட்சத்தில்., பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளில் இருந்து பெண்கள் தப்பிக்க இயலும். 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாவிபாளையம் பகுதியில் வசித்து வரும் காம கொடூரனின் பெயர் செந்தில் (வயது 39). இவனது வீட்டிற்கு அருகே சுமார் 7 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில்., கடந்த பிப்ரவரி மாதத்தின் போது 23 ஆம் தேதியன்று சிறுமியின் பெற்றோர்கள் வெளியே சென்று இருந்துள்ளனர். 

SEXUAL HARASSMENT, SEXUAL ABUSE, RAPPED,

சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில்., வெளியே வந்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். சிறுமி தனிமையில் இருப்பதை அறிந்த காம கொடூரன்., சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி., வீட்டின் அருகே இருக்கும் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துள்ளான். இதனால் மிரண்டு போன சிறுமி., அங்கிருந்து தப்பி சென்று வீட்டிற்குள் சென்று ஒளிந்துள்ளார். 

சிறுமியின் வீட்டு வாயிலில் காத்திருந்த காம கொடூரன் சிறுமி., வீட்டின் கதவை திறந்து காம கொடூரன் சென்றுவிட்டானா? என்று பார்பதற்குள் வேகமாக வந்து சிறுமியை தூக்கி சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும்., இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளான். வெளியே சென்ற பெற்றோர்கள் வீட்டிற்கு திரும்பியவுடன் தனக்கு நடந்த கொடுமையை சிறுமி கூறி கதறியழுத்துள்ளார். 

SEXUAL HARASSMENT, SEXUAL ABUSE, RAPPED,

இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு காம கொடூரன் செந்திலை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இன்று மீண்டும் நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் காம கொடூரனான செந்திலிற்க்கு சுமார் ஏழு வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். மேலும்., அபராத தொகையையை கட்டமறுப்பின் மேலும் ஒரு வருட சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டனர்.  

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IN THIRUPUR GIRL RAPPED CASE COURT ORDERED 7 YEAR JAIL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->