மனைவி மற்றும் மகளை கொடூர கொலை செய்த தந்தை.! கொலைக்கான காரணத்தை கேட்டு அதிர்ந்து போன காவல் துறையினர்.!!
in thirunelveli husband killed her wife for her daughters love help moment
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும்செவல் பகுதியை சார்ந்தவர் சுப்பையா. இவரது மகனின் பெயர் சமுத்திரபாண்டி (வயது 35). இவருடைய மனைவியின் பெயர் வெள்ளைதுரைச்சி (வயது 39). இவர்கள் இருவருக்கும் இடையே நான்கு வயது வித்தியாசம் உள்ள நிலையில்., இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளின் பெயர் சிவரஞ்சனி (வயது 17).
சமுத்திரபாண்டி கர்நாடக மாநிலத்தில் டவர் அமைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில்., கணவன் மற்றும் மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சமயத்தில்., வீட்டிற்கு வந்திருந்த சமுத்திரபாண்டி அவரது மனைவி வெள்ளைதுரைச்சி மற்றும் அவரது மகள் சிவரஞ்சினிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடுமையான ஆத்திரமடைந்த சமுத்திரபாண்டி அரிவாளால்., வெள்ளைதுரைச்சியை சரமாரியாக வெட்டிவிட்டு அவரது மகளான சிவரஞ்சினியையும் வெட்டியுள்ளார். சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே வெள்ளைதுரைச்சி இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். சிவரஞ்சனி உயிருக்கு போராடி அலறித்துடித்தார்.
இவரின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரையவே., இவர்களை கவனித்த சமுத்திரபாண்டி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிவரஞ்சினியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து., வெள்ளைதுரைச்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவரஞ்சினிக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக்க பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., சிவரஞ்சினிக்கும் அதே பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரத்தை சிவரஞ்சனி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அவரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில்., விடுமுறைக்கு வந்த சமுத்திரபாண்டிக்கு இந்த காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சமுத்திரபாண்டி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சமயத்தில் நேற்று மத்திய வேலையில் இந்த விவகாரம் தொடர்பான பிரச்சனை மீண்டும் எழுப்பவே., அந்த நேரத்தில் ஏற்பட்ட தகராறை அடுத்து ஆத்திரமடைந்த சமுத்திரபாண்டி இருவரையும் வெட்டியுள்ளார். இந்த நிலையில்., இருவரையும் வெட்டி விட்டு தப்பியோடிய சமுத்திரபாண்டி புளியங்குடி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில்., இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in thirunelveli husband killed her wife for her daughters love help moment