திருமணம் முடிந்து இரண்டே மாதம்... காவல் நிலையத்திற்கு அலறி ஓடிய புதுமண பெண்ணின் தந்தை.. அரங்கேறிய துயரம்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சீர்காழி மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் பாலு (வயது 34). இவர் மயிலாடுதுறையில் டிராக்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவியின் பெயர் மாரியம்மாள் (வயது 26). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 2 மாதங்களே ஆகியிருந்த நிலையில், இவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று மாரியம்மாள் வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கிய இருந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாரியம்மன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மகளின் தற்கொலை செய்தியை அறிந்த மாரியம்மாளின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையிலும், மாரியம்மாள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

பின்னர் இது தொடர்பாக பாலுவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கணவன் - மனைவி குடும்ப பிரச்சினையில் கொலை செய்தது தெரியவந்தது. இதில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பம் தொடர்பாக பிரச்சினை இருந்ததும், இதனால் அவ்வப்போது வரும் தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.  

இந்த நேரத்தில், சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொலை செய்து, கொலையை மறைக்க தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலுவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். திருமணம் முடிந்தும் 2 மாதமே ஆவதால் வட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thanjavur wife killed by husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->