நேருக்கு நேர்.. நொடிப்பொழுதில் சோகம்.!! அலறிய பயணிகள்.. அரங்கேறிய பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் இருந்து கேரளாவிற்கு நேற்றிரவு தனியார் சொகுசு பேருந்தானது புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னுர் பகுதியை சார்ந்த பாஸ்கர் என்பவர் இயக்கி வந்துள்ளார். 

இந்த பேருந்தானது., இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி பகுதியை அடுத்துள்ள தாழையூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டு இருந்த நேரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்துள்ளது. 

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வலது புறமாக சென்ற சமயத்தில்., ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேராக மோதியது. 

நொடிப்பொழுதில் அரங்கேறிய விபத்தில் பேருந்தின் முன்பகுதிகள் நொறுங்கிய நிலையில்., விபத்தில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் உயிருக்காக அலறித்துடித்தனர். 

accident,

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., விபத்து குறித்து காவல் துறையினருக்கும் - மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துரையினர் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய 48 பயணிகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மேலும்., சொகுசு பேருந்தின் ஓட்டுநரான பாஸ்கரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam road accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->