மனைவியின் தங்கையை சிறுமி என்றும் பாராது., பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்.! காதல் திருமணம் செய்து விபரீதம்.!!
in selam girl rapped by her sister husband police investigation
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகேயுள்ள குருவாளியூர் பகுதியை சார்ந்தவரின் பெயர் மணி. இவரது மனைவியின் பெயர் கலா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து., இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில்., அதே பகுதியை சார்ந்தவரின் பெயர் மணி. இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக., பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த மணி - கலா தம்பதியரின் மூத்த மகளான பிரியாவை காதலித்து வந்துள்ளான்.
இவர்கள் இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே., இதனை கடுமையாக பெற்றோர்கள் எதிர்த்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி பிரியா திருமணம் செய்து கொண்ட நிலையில்., இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., காம கொடூரனான மணிக்கு., தனது மனைவியின் தங்கை மீது காம பார்வை விழுந்துள்ளது. இதனையடுத்து சிறுமியிடம் அவ்வப்போது பாசமாக இருப்பது போல நடித்து வந்துள்ளான். இந்த நிலையில்., அக்காவின் மீதுள்ள பாசத்தால்., சிறுமி அவ்வப்போது தனது அக்காவை., அவரின் இல்லத்திற்கு வந்து கண்டு சென்றுள்ளார்.
மனைவி வீட்டில் இல்லாத தருணத்தில்., சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும்., வெளியே கூறினால் உனது அக்காவை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் பதறிப்போன சிறுமி இது குறித்து வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த தருணத்தில்., சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சிறுமியின் நடவடிக்கையில் இருந்த மாற்றத்தை கவனித்த பெற்றோர்கள்., சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில்., சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து செய்வதறியாது திகைத்த பெற்றோர்கள்., சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து., அக்காவின் கணவன் சிறுமியை சீரழித்தது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in selam girl rapped by her sister husband police investigation