சொந்த மகளை சீரழித்த காம கொடூர தந்தை.! தாயாரும் உடந்தையாக இருந்த சோகம்.!! சிறுமி எடுத்த அதிரடி முடிவு.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல கொடூரங்கள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தினமும் பள்ளி மற்றும் கல்லூரி என்று பணிகளுக்கு செல்லும் பெண்கள் பல விதமான முறையில் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

அவ்வாறு நடைபெறும் அநீதிகள் காம கொடூர எண்ணத்தை கொண்ட நன்கு அறிந்த நபர்களால் அரங்கேற்றபட்டு வருகிறது என்பது பெரும் அதிர்வலையை நம்மிடையே பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில்., சிறுமி ஒருவர் தனது தாயார் மற்றும் தந்தையின் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்துள்ள கிராமத்தை சார்ந்த நபர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் விழுப்புரத்தில் இருக்கும் நிலையில்., விவசாயியாக பணியாற்றி வருவதன் காரணமாக., பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் வந்து இருந்துள்ளனர். இந்த சமயத்தில்., சிறுமி தனது தந்தையின் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். 

அந்த புகாரில்., எனது தந்தை என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார். பெற்ற மகள் என்றும் பாராமல்., சிறுமி என்றும் கருதாது., எண்ணை பலாத்காரம் செய்து வருகிறார்., இந்த விசயத்திற்கு எனது தாயாரும் உடந்தையாக இருக்கிறார் என்று கண்ணீருடன் தனக்கு நடந்த கொடுமையின் துயரத்தை கூறி கதறி அழுதுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., உடனடியாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையை அடுத்து., சொந்த மகளை தந்தையே சீரழித்த சம்பவம் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர்., இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pollachi girl sexual harassment by her father with help of mother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->