பெற்றெடுத்த குழந்தையை 250 அடி பள்ளத்தில் வீசி கொலை செய்த தந்தை.! விசாரணையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகேயுள்ள அரசம்பட்டி பகுதியை சார்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவியின் பெயர் பாக்கியம். இவர்கள் இருவருக்கும் கிரிதாஸ் என்ற 8 வயதுடைய மகனும்., கவிதர்ஷினி என்ற 5 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில்., சிரஞ்சீவி தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இதனால் ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரம் அடைந்த மனைவி சண்டை நடைபெறும் சமயத்தில்., தனது தாயாரின் இல்லத்திற்கு செல்வது வாடிக்கை என்றும் கூறப்படுகிறது. மேலும்., இவ்வாறான சண்டை சமயத்தில் இரண்டு பிள்ளைகளை உறவினரின் இல்லத்தில் விட்டுவிட்டு., மனைவியை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இந்த தருணத்தில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருவருக்குள்ளும் தகராறு பெருத்த நிலையில்., சண்டை - தகராறு - சமாதானம் என்று வழக்கம் போல் முடிவடைந்து இருந்த நிலையில்., மனைவி வீட்டிற்கு வந்ததும் எமோஷனல் பிளாக்மெயில் செய்தும் வந்துள்ளார். இந்த நிலையில்., சண்டை முடித்து மனைவி வீட்டிற்கு வந்ததும்., குழந்தைகளின் புகைப்படத்தை வைத்து சிரஞ்சீவி அழுதுள்ளார். 

இதனை கண்டு சந்தேகத்திற்கு உள்ளான மனைவி குழந்தைகள் குறித்து கேட்கவே., சிரஞ்சீவி பதில் தெரிவிக்க மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து உறவினரின் இல்லத்திற்கு சென்று விசாரித்தும் குழந்தைகள் குறித்த தகவல் தெரியாததால்., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில்., கடந்த 11 ஆம் தேதியன்று ஏற்பட்ட தகராறை அடுத்து., ஆத்திரமடைந்த நான் செம்மேடு சீக்குப்பாறை மலை உச்சியின் மீது ஏறி குழந்தையை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு வந்ததாகவும்., தனது மனைவியின் மீதுள்ள ஆத்திரம் காரணமாக இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal child killed by father police investigation going on


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->