பெண்ணை கடத்தி சென்று நகைகளை பறித்துக்கொண்ட வடமாநில கும்பல்..! மயிலாடுதுறையில் பேரதிர்ச்சி..!! அதிர்ச்சியாக்கும் பெண்ணின் வாக்குமூலம்..!!
in mayiladuthurai girl kidnapped and released police investigation going on
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை அடுத்துள்ள கிளியனூர் வேளூர் பகுதியை சார்ந்தவர் சிற்றரசு. இவரது மகளின் பெயர் காயத்ரி (வயது 26). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில்., தினமும் பணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். இவர் நேற்று முன்தினத்தன்று வழக்கம்போல பணிக்கு சென்று விட்டு., பணிகள் நிறைவு பெற்றதும் தனது இல்லத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
இந்த சமயத்தில்., இவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இவர் வந்து கொண்டு இருக்கும் போது., அதிவேகத்தில் எதிர்திசையில் காரொன்று வந்து., அதில் இருந்து மூவர் காயத்ரியை கடத்தியுள்ளனர். இதனால் பறித்துப்போன காயத்ரி அலறவே., இரவு நேரம் என்பதால் யாரும் இல்லை. கடத்தல் கும்பலுக்கு இது வசதியாக போனதால்., காயத்ரியை காரில் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர். இந்த தருணத்தில்., பணிக்கு சென்ற மகள் மீண்டும் வீட்டிற்கு வராததால்., அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உறவினர்கள் மூலமாக பார்த்து வர சொல்லியுள்ளனர்.
இந்த சமயத்தில்., வீட்டில் இருந்து சிறிது தொலைவில்., காயத்ரியின் இருசக்கர வாகனம் சாய்ந்த நிலையில்., செருப்புகள் இங்கும் அங்குமாய் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்., காயத்ரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இந்த சமயத்தில்., காவல் நிலையத்திற்கு மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மற்றொரு வழக்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளார்.
பெற்றோர்கள் கூறிய விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து., உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். முதற்கட்ட செயலாக அங்கிருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ய திட்டமிட்டு., சோதனை செய்ய துவங்கியுள்ளனர். இந்த தருணத்தில்., நள்ளிரவு சுமார் 1 மணியளவில் காயத்ரி தனது தந்தைக்கு தொடர்பு கொண்டு., தன்னை கடத்தி சென்ற கடத்தல் கும்பல்., திருவாரூரில் இருக்கும் கங்காளஞ்சேரி பகுதியில் தன்னை இறக்கிவிட்டு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த காவல் துறையினர்., அங்குள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து., காயத்ரியை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையிடம் காயத்ரி தெரிவித்தாவது., எனது வீட்டின் அருகே காரில் வந்த கும்பல் தன்னை கடத்தி கொண்டு சென்றனர். இரவு நேரம் என்பதால்., கார் எந்த திசையில் போகிறது என்று தெரியாமல் இருந்தேன். காரில் இருந்த மூவரும் இந்தி மொழியில் பேசிக்கொண்டு இருந்தனர். என்னிடம் இருந்த நகைகளை வாங்கிக்கொண்டனர்.
என்னை கடத்திய கும்பலிடம் என்னை விட்டுவிடுமாறு கதறியழுததை அடுத்து., என்னை போட்டோ எடுத்துவிட்டு., மூவரும் மீண்டும் இந்தியில் பேசிக்கொண்டு., என்னை கங்களாஞ்சேரியில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இந்த சமயத்தில்., எனது நிச்சயதார்த்தத்திற்கு போடப்பட்ட நகைகள் அனைத்தையும் எடுத்து சொல்கிறீர்களே என்று கூறி கதறியழுதேன். அவர்கள் என்னை இறக்கிவிட்டு பின்னர் எனது மோதிரத்தை மட்டும் திரும்பி கொடுத்துவிட்டனர். கங்களாஞ்சேரியில் சாலையில் இருந்த நபர்களிடம் எனது நிலையை கூறி., அவர்களின் அலைபேசியில் எனது தந்தைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., கடத்தல் கும்பல் இந்தி மொழியில் பேசிய விவகாரம் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in mayiladuthurai girl kidnapped and released police investigation going on