கள்ளகாதலியின் கணவனை போட்டுத்தள்ளி, திருமணம் செய்து வைக்க பெண் கேட்டு சென்ற கள்ளக்காதலன்.. விருதுநகரில் பேரதிர்ச்சி..!!
in Madurai man murder due to illegal affair
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆணைக்குழாய் மேலத்தெரு பகுதியை சார்ந்தவர் முத்தையா. இவரது மனைவியின் பெயர் காளீஸ்வரி. இவர்களது மகனின் பெயர் மணிகண்டன் (வயது 28). இவர் தனியார் வங்கியில் கடன் முகவராக பணியாற்றி வருகிறார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவரது மனைவியின் பெயர் சித்ரா தேவி.
இவர்களின் மகளின் பெயர் ஜோதிலட்சுமி (வயது 21). மணிகண்டனிற்கும் - ஜோதிலட்சுமிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஜோதிலட்சுமியின் தந்தை சிவகுமார் மற்றும் தாயார் சித்ராதேவி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தாய் தந்தையை கவனித்துக்கொள்வதற்க்காக ஜோதிலட்சுமி தனது தந்தையுடன் தாயாரின் இல்லத்திற்கு வந்த நேரத்தில், இவருக்கு உதவியாக உறவினர் கார்த்திக் (வயது 24) என்பவர் இருந்துள்ளார். இந்த நேரத்தில், ஜோதிலட்சுமிக்கும் - கார்த்திக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
மேலும், அவ்வப்போது அங்குள்ள பல பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்த சமயத்தில், ஜோதிலட்சுமியுடைய தந்தை சிகிச்சை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்ததை அடுத்து, ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் கணவரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். கணவரின் இல்லத்தில் இருந்தாலும், கார்த்திக்குடன் மணிக்கணக்கில் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தில் மணிகண்டன் மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறை அடுத்து, ஆத்திரமடைந்த ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் தாயாரின் இல்லத்திற்கு வந்துள்ளார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கார்த்திக், ஜோதிலட்சுமியை மனம் முடித்து தரக்கூறி பேசியுள்ளார். இந்த விசயத்திற்கு ஜோதிலட்சுமியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கார்த்திக்கிற்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கொலை திட்டத்தை அரங்கேற்ற காத்திருந்த கார்த்திக், மணிகண்டன் பணிக்கு புறப்பட்டுக்கொண்டு சென்ற சமயத்தில், குடும்ப பிரச்சனை தொடர்பாக சமாதானம் பேச அழைப்பதாக கூறி கத்தியால் மணிகண்டனை கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்த கையோடு மணிகண்டனை கொலை செய்துவிட்டேன், எனக்கு திருமணம் செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதிலட்சுமியின் பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, ஜோதிலட்சுமியின் பெற்றோரை மிரட்டிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து கார்த்திக் தப்பி சென்றுள்ளான். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தலைமறைவாக உள்ள கார்த்திகை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai man murder due to illegal affair