மனைவியின் தோழியை தற்கொலைக்கு தூண்டிய கொடூரனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!!
in krishnagiri court order to culprit to jail
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜகடை அருகேயுள்ள நலகொண்டப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் சங்கர் (வயது 33). இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவரது மனையின் பெயர் இராதா (வயது 27). இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று இருவரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில்., கடந்த 2013 ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட தகராறை அடுத்து., சங்கர் தனது மனைவியை துரத்தி துரத்தி அடித்துள்ளார். இதனால் பயந்துபோன ராதா., அதே பகுதியை சார்ந்த தோழி காயத்ரி (வயது 23) என்பவரின் இல்லத்திற்குள் சென்று மறைந்து இருந்துள்ளார்.
இந்த நேரத்தில்., வீட்டிற்கு வந்த சங்கர் தனது மனைவி குறித்து கேட்கவே அவர் வரவில்லை என்று காயத்ரி தெரிவித்துள்ளார். இதனை நம்பாத சங்கர் வீட்டில் மறைந்து இருந்த மனைவியை தேடி., வெளியே இழுத்து வந்து அடித்து அவதூறான வார்த்தைகளை பேசி திட்டுகிறார்.
இதுமட்டுமல்லாது அவருக்கு உதவி செய்த காயத்ரியை அடித்து அவதூறான வார்த்தைகளால் பேசியதை அடுத்து., மன உளைச்சலுக்கு உள்ளான காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவலானது காவல் துறையினருக்கு தெரியவரவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததை அடுத்து., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சங்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும்., ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
English Summary
in krishnagiri court order to culprit to jail