13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்.! தோழியால் வெளியான சிறுமியின் கண்ணீர் துயரம்..!!
in krishnagiri child abuse culprit arrest by police
இந்தியா முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் குழந்தைகள் முதல் சிறுமிகள்., இளம்பெண்கள் என பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்கள் தினமும் அரங்கேறிய வண்ணம் உள்ளது.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளியை அடுத்துள்ள ஜெபிக்கானபள்ளி கிராமத்தை சார்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்., சுப்பிரமணி இதே பகுதியை சார்ந்த ஏழாம் வகுப்பை பயின்று வரும் 13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
மேலும்., சிறுமியை இயற்கைக்கு மாறான முறைகளில்., ஆபாச படங்களில் காட்டப்படும் வன்முறை பாலியல் காட்சிகளை போலவே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான்.
மேலும்., இதனை வெளியே கூறினால் கோதை செய்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டி வந்த நிலையில்., சில காலம் பல துயரத்தை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்த சிறுமி தனது தோழியிடம் கூறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு பதறிப்போன தோழி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து., இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்த வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சுப்பிரமணியை கைது செய்து சிறையில் ஆடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in krishnagiri child abuse culprit arrest by police