காலம்போன கடைசியில் மனைவியின் மீது சந்தேகம்.. இரக்க பெயர் கொண்ட மனைவிக்கு, இரக்கமே இல்லாமல் கணவன் செய்த பெரும் கொடூரம்.!!
in kanniyakumari wife murder by husband due to doubts
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தேவாளை புதூர் கிராமம் பகுதியை சார்ந்தவர் புஷ்பதாஸ் (வயது 56). இவரது மனைவியின் பெயர் இரக்கம் (வயது 52). இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இவரது இளையமகள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
புதூரில் புஷ்பதாஸ் மற்றும் இரக்கம் மட்டும் வசித்து வரும் நிலையில், மனைவியின் நடத்தையில் கணவர் சந்தேகித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட கணவன் - மனைவி தகராறில் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த புஷ்பதாஸ், அங்கிருந்த மரக்கட்டையை வைத்து மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி மனைவியை கொளுத்தியுள்ளார். உடலில் தீப்பற்றி எறிந்த உடலோடு வீதியில் வைத்து அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து இரக்கம் தரையில் வீழ்ந்துள்ளார்.
இவரை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன்பின்னர் மருத்துவமனைக்கு சென்று இரக்கத்திடம் இருந்து வாக்குமூலம் பெற்ற நிலையில், இவரது வாக்குமூலத்தில் கணவர் தன் மீதுள்ள சந்தேகத்தால் கொலை செய்ய முயற்சித்தது தொடர்பான விபரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து புஷ்பதாசை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari wife murder by husband due to doubts