குமரியில் கரோனா வார்டில் இருந்த மூன்று பேர் அடுத்தடுத்து பலி.. அதிர்ச்சியில் தமிழகம்..!!
in kanniyakumari hospital corona symptoms died
குமரி கரோனா வார்டில் அனுமதியான 3 பேர் அடுத்தடுத்து பலியாகிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் மூவரும் கரோனா சந்தேகத்துடன் மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த நிலையில், இன்று ஒரேநாளில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்..
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த 2 பேர் ஏற்கனவே பலியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படாத நிலையில், இவர்களின் உயிரிழப்பு நடந்துள்ளது. மேலும், உயிரிழந்த நபர்களில் 2 வயது குழந்தை, ஒரு இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் இரத்த மாதிரிகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ முடிவுகள் தெரியவரும் பட்சத்திலேயே இவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவரும்.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari hospital corona symptoms died