காதல் திருமணம்.. இரண்டரை வருடமாக கொடூர சித்தரவதை.. துடிதுடித்து உயிரிழந்த இளம்பெண்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!!
in kanniyakumari girl torture and killed by love marriage husband plan to safe escape
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சாலை வட்டவிளை பகுதியை சார்ந்தவர் சதாசிவன். இவரது மனைவியின் பெயர் செல்வி. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஜா என்ற 25 வயதுடைய மகள் இருக்கிறார். அங்குள்ள தொங்கம்புதூர் பகுதியை சார்ந்தவர் சிவன். சிவனும் - ஸ்ரீஜாவும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீஜா - சிவன் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஸ்ரீஜாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவன் ஸ்ரீஜாவை அவரது தாயாரின் இல்லத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக ஸ்ரீஜா நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். ஸ்ரீஜாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீஜாவின் தாயார் இது தொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில் ஸ்ரீஜாவின் தாயார் கூறியுள்ளதாவது, என் மகள் ஸ்ரீஜா, கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் எனது மகளிடம் வரதட்சனை கொடுமை செய்ததில், எனது மகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டரை வருடமாக என்னை எனது மகளை கூட பார்க்கவிடாமல் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லை என்று கூறி எனது வீட்டில் விட்டுவிட்டு சென்ற பின்னர் மகள் துடிதுடித்து உயிரிழந்துள்ளார் என்று கூறியுள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari girl torture and killed by love marriage husband plan to safe escape