சிறுமிக்கு கதாநாயகி ஆசை காட்டி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரம்.! மேடையில் ஆபாச நடனம்., நண்பர்களுக்கு விருந்து.!! சீரழிந்த வாழ்க்கை.!!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையை அடுத்துள்ள அப்ப்பட்டுவிளை பகுதியை சார்ந்தவன் அஜித்குமார். இவன் நடன ஆசிரியராக பணியாற்றி வரும் சூழ்நிலையில்., இவனுக்கு திருமணம் முடிந்து ஏழு வயதுடைய ஆண் குழந்தையும்., ஆறு வயதுடைய பெண் குழந்தையும் உள்ளது. 

இவனது நடனப்பள்ளியில் அதே பகுதியை சார்ந்த மாணவி ஒருவர் நடனம் பயில வந்துள்ளார். இந்த மாணவியிடம் திரைத்துறை மோகத்தை ஏற்படுத்திய அஜித்குமார்., மாணவியை கதாநாயகியாக மாற்றுகிறேன் என்றும்., தனக்கு திரைத்துறையில் உள்ள பல இயக்குனர்களை தெரியும் என்றும் கூறியுள்ளான். 

இவனது ஆசைவார்த்தையில் மயங்கிய மாணவி அஜித்குமாரின் மீது காதல் வலையில் விழவே., கடந்த அக்டோபர் மாதம் 25 ம் தேதியன்று மாணவிக்கு தொடர்பு கொண்ட அஜித்குமார்., மாணவியிடம் துணை நடிகர்கள் உன்னை காண அழைத்ததாக கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி அஜித்துடன் திருச்செந்தூரில் உள்ள காயல்பட்டினத்திற்கு சென்றுள்ளார். 

இந்த சமயத்தில் மாணவியை பலவந்தப்படுத்தி அங்குள்ள இல்லத்தில் அடைத்து வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். இதுமட்டுமல்லாது அவனது நண்பரை துணை இயக்குனர் என்று கூறி அவனது இல்லத்திற்கு அனுப்பி வைத்து., அவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறி தனது நண்பனுக்கும் விருந்தாக்கியுள்ளான். 

பின்னர் மாணவியை சென்னைக்கு அழைத்து சென்று அங்குள்ள இடத்தில் கதாநாயகிக்கான தேர்வு நடைபெறுவது போல காட்சிகளை ஏற்பாடு செய்து., பின்னர் இன்னும் சரியான நடிப்பு வரவில்லை., சில மேடை நாடகங்களில் நடித்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று கூறி., மீண்டும் காயல்பட்டினம் பகுதிக்கு அழைத்து வந்து அஜித்தின் நண்பனின் வீட்டில் வைத்து அடிக்கடி பாலியில் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். 

இந்த நிலையில்., தனது மகளை பற்றிய விபரங்கள் அறியாமல் தவித்து வந்த தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில்., முதலில் துப்பு ஏதேனும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில்., அஜித்குமாரின் நடவடிக்கையில் இருந்த சந்தேகத்தை கண்டுள்ளனர்.

அந்த சமயத்தில் அஜித்தின் அலைபேசி என்னை சோதனை செய்கையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையத்தில் அஜித் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இராசபாளையம் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு., விஷயத்தை கூறிய காவல் துறையினர் இளம்பெண் மற்றும் அஜித்தின் விபரங்களை கூறியுள்ளனர். 

இதனை அறிந்த இராசபாளையம் காவல் துறையினர்., அங்குள்ள பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாவில் மேற்கொள்ளப்படும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று சோதனை செய்ததில்., மாணவி ஆபாச நடனம் ஆடிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மீட்ட காவல் துறையினர் மார்த்தாண்டம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும்., அஜித்குமாரை அதிரடியாக கைது செய்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மார்த்தாண்டம் காவல் துறை அதிகாரிகள் மாணவியை அழைத்து சென்று அங்குள்ள ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும்., அஜித்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது தொடர்பான தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari girl rapped by dance teacher and his friends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->