10 வயது மகளை மதுவிற்கு விற்பனை செய்து., தானும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.! ஈரோட்டில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையம் பகுதியை அடுத்துள்ள கூகலூர் பகுதியை சார்ந்தவர் குமார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 10 வயதுடைய மகள்., 5 வயதுடைய மகனுடன் வசித்து வருகிறார். 

குமாருக்கும் - அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில்., மதுபோதைக்கு குமார் அடிமையாகியிருந்த காரணத்தால்., தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறப்பு பள்ளியில் பயின்று வருகின்றனர். 

பள்ளியில் தற்போது சிறுமி 5 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்துள்ளார். சிறுமியின் நிலையை கண்டு பெரும் மன வருத்தத்திற்கு உள்ளான பக்கத்து வீட்டு பெண்மணி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

 hospital, மருத்துவமனை,

மருத்துவமனையில் சிறுமிக்கு மருந்து மற்றும் மாத்திரை வாங்கி கொடுத்த நிலையில்., வீட்டிற்கு வரும் போது சிறுமி தனக்கு அரங்கேறிய பாலியல் கொடுமைகளை கூறி கட்டியணைத்து கதறியழுதுள்ளார். 

மேலும்., இதே பகுதியை சார்ந்த அருணாசலம் மற்றும் மயில்சாமி என்ற இருவரின் பெயரை கூறிய சிறுமி., இவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியின் தந்தைக்கு மது வாங்கி கொடுத்துவிட்டு., தனக்கான உணவு வாங்கி தருவதாக கூறி இல்லத்திற்கு அழைத்து சென்று கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரிவித்தார். 

இதில் அதிர்ச்சி தரும் விஷயமாக குடிகார தந்தையும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை கூறி கதறியழுதுள்ளார். இதனையடுத்து பதறிப்போன பெண்மணி அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமியை சோதனை செய்ததில்., சிறுமி பலமுறை தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளனர். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் பெண் புகாரளித்ததை அடுத்து., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியின் தந்தை குமார்., அருணாசலம் மற்றும் மயில்சாமியின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும்., இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அருணாசலத்தை கைது செய்த காவல் துறையினர்., தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர். மேலும்., இவன்கள் மூவருக்கும் கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தி உள்ளார். 

சிறுமிக்கு நேர்ந்த துயரத்தை அறிந்த அப்பகுதி மக்கள் மயில்சாமியின் வீட்டிற்குள் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடினர். தலைமறைவான இருவரையும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை மீண்டும் பதிவு செய்துள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode child sexual harassment by father and his friends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->