தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த துயரம்.! திண்டுக்கல்லில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தையே தீபஒளித் திருநாளன்று சோகத்தில் மூழ்கடித்த சுர்ஜித்தின் மரணமே இன்னும் நம்மில் இருந்து மறையாமல் உள்ளது. இந்த தருணத்தில்., தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தையொன்று தண்ணீர் கேனில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சோகம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில்., இதனைப்போன்று மற்றொரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியை சார்ந்தவர் இராஜசேகர். இவரது மனைவியின் பெயர் தேவி. இவர்கள் இருவருக்கும் பிரசாந்த் என்ற ஆண் குழந்தையானது உள்ளது. 

சம்பவத்தன்று., குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில்., அங்கிருக்கும் திறந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்துள்ளது. குழந்தையை காணாது தேடிய பெற்றோர்., குழந்தை தொட்டியில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதனையடுத்து குழந்தையை மீட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அங்குள்ள திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொண்டு அனுமதித்த நிலையில்., குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனை அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindukal boy died in water bucket police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->