கார் வாங்கி தராததால்., கர்ப்பிணி பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த சோகம்.! இறுதியில் அரங்கேறிய துயரம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகேயுள்ள சி.கொத்தங்குடி பகுதியை சார்ந்தவன் ஜெயபால். இவனது மகனின் பெயர் நவீன்ராஜ். இவன் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியனாக பணியாற்றி வருகிறான். இவனுக்கும் - அங்குள்ள கீழ்புவனகிரி பகுதியை சார்ந்த லிங்கபைரவர் நகரை சார்ந்த சங்கீத பிரியா (வயது 22) என்பவருக்கும் திருமணம் முடிக்க முடிவு செய்யப்பட்டு., கடந்த 2018 ஆம் வருடத்தில் திருமணம் முடிந்தது. 

இந்த சமயத்தில்., திருமணத்திற்கு பின்னர் நவீன்ராஜ் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மகராஷ்டிராவிற்கு சென்று ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த தருணத்தில் சங்கீத பிரியா கர்ப்பமாகியுள்ளார். மேலும்., மூன்று மாத கர்ப்பிணியாக சங்கீத பிரியா இருக்கும் தருணத்தில்., உறவினரின் இல்லத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் மீண்டும் சி.கொத்தங்குடிக்கு வந்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture, பாலியல் தொந்தரவு, பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை,

இந்த நேரத்தில்., நவீன்ராஜுக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த நிலையில்., தனது மனைவியிடம் உனது வீட்டாரிடம் சென்று எனக்காக கார் வாங்கிவிட்டு வா என்று கூறியுள்ளான். இதனை ஏற்க மறுத்த பிரியா., கார் வாங்க என் வீட்டாரிடம் பணம் கேட்க இயலாது என்று கூறவே., இதனால் பிரியாவுக்கும் - நவீனின் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நவீன் மற்றும் அவனது குடும்பத்தினர் பிரியாவிற்கு கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி வலுக்கட்டாயமாக சாப்பிட கொடுத்துள்ளனர். இதனை அவர் சாப்பிட மறுத்ததை அடுத்து., திரைப்பட கொடூர காட்சிகள் போல மாத்திரைகளை வழங்கியுள்ளனர். இதனை சாப்பிட்டு கதறித்துடித்த பிரியாவிற்கு சிறிது நேரத்தில் கரு கலைந்துள்ளது. 

abortion, கருக்கலைப்பு,

மேலும்., நவீன் உங்கள் மகளுடன் இனி என்னால் வாழ இயலாது என்று கூறி., பிரியாவின் இல்லத்தில் சென்று பிரியாவை ஒப்படைத்துவிட்டு வந்துள்ளான். இனையடுத்து சங்கீத பிரியா இது குறித்த அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இதனை ஏற்ற காவல் துறையினர் நவீன்ராஜ்., அவனின் தந்தை ஜெயபால்., தாயார் சகிலா., தங்கை வினோதினி மற்றும் தம்பி கேசவராஜை கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore girl abort by husband family torture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->