கோவையில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்.! 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்., இறுதியில் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான சூழ்நிலையில் பெண்கள் குழந்தையாய் பிறந்த நாட்கள் முதலாகவே தங்களின் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் இன்று உள்ளனர். 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாளையத்திற்கு அருகில் இருக்கும் கொண்டம்பாளையம் கிராமத்தை சார்ந்த மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணி செய்து வருபவர் தண்டபாணி (வயது 61). இவரின் மீது அப்பகுதி மக்கள் நன்மதிப்பை வைத்திருந்தனர். 

இந்த நிலையில்., கடந்த இருப்பது நாட்களுக்கு முன்னதாக கோவிலின் அருகே அதே பகுதியை சார்ந்த சுமார் எட்டு வயதுடைய சிறுமி விளையாடி கொண்டு இருந்த நிலையில்., குழந்தைக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். 

இந்த செயலை கடந்த இருப்பது நாட்களாக தொடர்ந்து செய்து வந்து கொண்டு இருந்த நிலையில்., குழந்தை வயிறு வலிப்பதாக கூறி கதறியழுதுள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் பதறியபடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். 

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயத்தை குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்கவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்த விசாரணையை மேற்கொள்ள துவங்கியது அடுத்து., தண்டபாணி குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் தண்டபாணியிடம் விசாரணை மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore girl rapped by 61 year old man police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->