வகுப்பறையின் கதவை திறந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி.! அலறிப்போன கல்லூரி.!!
in chennai teacher attempt suicide in college
தமிழகத்தின் சென்னையில் உள்ள அரும்பாக்கம் - பூந்தமல்லி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டி.ஜி.வைஷ்ணவி பெண்கள் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஹரிசாந்தி. இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக பணியிலிருந்து விலகி விட்ட நிலையில்., கல்லூரிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் அவ்வப்போது கல்லூரிக்கு வந்து செல்லும் நிலையில்., சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல கல்லூரிக்கு வந்த ஹரிசாந்தி தான் பாடம் எடுத்த முதலாவது மாடியில் உள்ள வகுப்பறையில் சென்று இருந்துள்ளார்.
இந்த நிலையில்., வகுப்பறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவிகள் இவரது உடலை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினர்.
இந்த தகவலை அறிந்த ஆசிரியர்கள் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும்., இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்., கல்லூரியில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai teacher attempt suicide in college