பிறந்தநாள் கொண்டாட்ட விபரீதம்.! மூன்று முறை உருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த 2 மாணவர்கள்.!!
in Chennai students died after birthday celebration
சென்னையில் உள்ள மண்ணடி பகுதியை சார்ந்தவர் அகமது பாகீம் (வயது 19) மற்றும் முகமது சபீன் (வயது 19). இவர்கள் இருவரும் பெருங்குளத்தூரை அடுத்துள்ள தனியார் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வருகின்றனர். அகமது பகீருக்கு நேற்று முன் தினம் பிறந்தநாளாக இருந்த நிலையில்., நண்பர்கள் இருவரும் இவர்களோடு கல்லூரியில் பயின்று வந்த மேலும் மூன்று நண்பர்களை வைத்து பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இவர்களின் திட்டப்படி அங்குள்ள உத்தண்டியில் இருக்கும் சொகுசு விடுதிக்கு சென்று., பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இதற்கு பின்னர் இவரால் அனைவரும் அதிகாலை நேரத்தில் திரும்பி கொண்டு இருந்துள்ளனர். இந்த சமயத்தில்., வாகனத்தை ஓட்டி வந்த முகமது முஷாரப் என்ற நபர்., காரை அதிவேகத்துடன் இயக்கி வந்துள்ளார்.
இந்த தருணத்தில்., சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஈஞ்சம்பாக்கம் சாலையில் வந்த போது தாறுமாறாக ஓடிய கார்., சாலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள தடுப்பு சுவரில் மோதியுள்ளது. கார் அதிவேகத்தில் சென்ற நிலையில்., சுமார் மூன்று முறை உருண்டு விழுந்துள்ளது.
இந்த விபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அகமது பாகீம் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., படுகாயமடைந்து உயிருக்கு துடித்துக்கொண்டு இருந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்., மீதமுள்ள மூன்று மாணவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai students died after birthday celebration