கொதிக்கலனில் தவறி விழுந்து துடிதுடித்து பலியான வாலிபர்... சென்னையில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியை சார்ந்தவர் அருள் சிதம்பரம் (வயது 37). இவரது மனைவியின் பெயர் ராஜலட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய மகன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் சொந்த ஊராக தூத்துக்குடி இருக்கும் நிலையில், அருள் சிதம்பரம் சென்னை பெரம்பூரில் தனியார் சிம்சன் தொழிற்சலையில் பணியாற்றி வந்துள்ளார். 

இவர் கடந்த 11 வருடமாக அங்கேயே பணியாற்றி வரும் நிலையில், இந்த தொழிற்சாலையில் வாகனத்திற்கான உதிரி பாகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று பணியில் இருந்த அருள் சிதம்பரம், எதிர்பாராத விதமாக கொதிக்கலனில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து இவரை மீட்ட சக ஊழியர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். 

மருத்துவமனையில் அருள் சிதம்பரத்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தும் பலனில்லாது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அருள் சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சமயத்தில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாது ஊழியர்களிடம் பணியை மட்டும் வாங்கிய தொழிற்சாலை நிர்வாகமே காரணம் என்று கூறி ராஜலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai man died slipped in boiler at factory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->